Thursday, 9th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: அ.ம.மு.க.வலியுறுத்தல்

ஜுலை 29, 2019 03:43

கும்பகோணம்:  கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின், செயல்வீரர்கள் கூட்டம்  ஒன்றிய அவைத்தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

மாநில துணை பொது செயலாளர் ரங்கசாமி,  மாவட்ட துணை செயலாளர் வடிவேல் சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் பாலமுருகன் செய்திருந்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட அபாயகரமான திட்டங்களை கைவிடவேண்டும். இந்த திட்டங்களை கொண்டு வரும் மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மின்னனு வாக்கு இயந்திரம் மூலமாக வாக்குகள் களவாடுவதை தடுக்கு இனிமேல் நடைபெறம் தேர்தல்களில் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். அண்ணலக்கிரஹாரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்